அந்காரமும், உடைந்துபோன தன்மையும் ஒவ்வொரு தெருவின் மூலையில்
பதிந்திருக்கிறது. குடியினாலும், விவாகரத்தினாலும் போதை பொருளினாலும், கடன்,
மன சோர்வு போன்ற எல்ல வித தீமையினாலே நம்முடைய குடும்பகளும் நம்முடைய
வாழ்கையின் அடிதளமும் கிழிக்கப்பட்டு இருக்கிறது. இவை வெறும் எண்ணிகை
அல்ல, இவைகள் நாம் அறியாதவர்கள் அல்ல. இவைகள் நம்மை சுற்றியுள்ள
இடங்களில் நடக்கும் காரியங்கள். கிருஸ்தவர்களாகிய நாம் இதற்க்கு எந்த விதமான
பாதிப்போ அக்கறையோ இல்லாதவர்களாக இருக்கிறோம். இந்த சூழ்நிலை மாறாது
என்று சத்துரு சொல்வதை நம்புகிறோம், சுற்றுபுறத்தை பார்த்து நாம்
விட்டுகொடுக்காமல் நமக்கு மேலான அழைப்பு உண்டு.
விசுவாசிகளாக நாம் சோர்வினால் நம் கரங்களை தூக்குவதில்லை அதற்க்கு பதிலாக
கரங்களை சேர்த்து ஜெபிக்கவேண்டும் ஏனெலில் ஜெபமானது அற்புதங்களை
செய்யும் வல்லமைகொண்டது தீமையை கட்டுகிற வல்லமை ஜெபத்திற்க்கு உண்டு
யாக்கோபு 4: 2 நீங்கள் கேட்காதாதினால் பெற்றுகொள்வதில்லை. திறப்பில் நிற்க
அதிகாரம் கொடுக்கபட்டு இருக்கிறது. காணாமல் போனவர்களுக்காகவும் எழும்பி
நிற்க அழைக்கப்பட்டு இருக்கிறோம். நம்முடைய யுத்தம் மாம்சத்தோடும்,
இரத்ததோடும் அல்ல, வான் மண்டல பொல்லாத ஆவிகளோடு, அந்தகார
ஆவிகளோடு உண்டு. எல்லா நாமதிற்க்கும் மேலான நாமத்தில் (இயேசு) இந்த
வல்லமைகளுக்கு விரோதமாக வரவேண்டும்.
தெரு ஜெபமானது சதாரணமாண ஒரு இயக்கம். உங்கள் தெருவிற்க்கு உங்கள்
சமுதாயத்திற்க்கும் ஜெபிக்கவும் விசுவாசிகளாகிய நீங்கள் ஒப்புகொடுங்கள். நீங்கள்
செய்யும் ஜெபத்தின் விளைவுகள் சதாரணமானது அல்ல. அது அசாதாரணமானது
மறுருப்படுத்தகூடியது இயற்க்கைக்கு அப்பாற்ப்பட்டது ஒவ்வொரு விசுவாசியும்
சவாலாக எற்றுகொண்டால் உங்கள் மாநிலம் , உங்கள் தேசம் மற்றும் உலகம்
முழுவதும் ஜெப போர்வையால் முடி இருக்கும். தெரு ஜெபத்திற்க்கு ஒப்பு
கொடுங்கள். உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். தேவன் அவரின் கடமையை
செய்வதை பார்ப்போம். நாம் இருக்கின்ற இடத்தில் எழுபுதலை நாம் பார்ப்போம்.